ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் 4.3 ஆக பதிவு..!

ஆப்கானிஸ்தான் ஃபைசாபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசாபாத் நகரத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. திடீரென நிலநடுக்கம் அங்கு ஏற்பட்ட காரணத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், இதனை தொடர்ந்து மீண்டும் இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட அதே ஃபைசாபாத் நகரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. 

தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பொருள்சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை.