தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம் – ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழில் பெயர்ப் பலகை இல்லாவிட்டால் அபராதம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தமிழ்நாட்டில் அரசின் ஆணையபடி தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது முதலில் ஒரு தொகையும், மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையையும் அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-22 வரை 6,047 கடைகளில் ரூ.4.58 லட்சமும், 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment