சபாநாயகரை சந்தித்த பழனிசாமி தரப்பு! கோரிக்கை பரிசீலிப்பதாக தகவல்!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் உதயகுமார் அமர நடவடிக்கை எடுக்குமாறு பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்துள்ளனர்.

வேலுமணி, உதயகுமார், சீனிவாசன், ராஜன் செல்லப்பா, முனுசாமி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவை சந்தித்து உள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது பற்றி சபாநாகரிடம் முறையிட்டு உள்ளனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கோரிக்கையை பரிசீலிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியதாக அதிமுக தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment