தமது ஆதரவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக தேர்தல் பணிகள் முடங்கியுள்ளது. வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால், வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெற பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இரு தரப்புக்கும் இன்று விநியோகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது இனி அதிமுகவின் பொது குழு முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…