ஒடிசா ரயில் விபத்து : 250 பயணிகள் இன்று சென்னை வருகை..!

விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த 250 பேர் இன்று  சென்னை வர உள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக ராசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த  நிலையில், விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த 250 பேர் இன்று  சென்னை வர உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை சென்னை காவ்ண்டுவரும் பணியும் முடிக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்க சென்னையில் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.