5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை – அரசாணை வெளியீடு

அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு.

அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம். ஏற்கனவே, 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி வரும் நிலையில், தற்போது வயது வரம்பு 5ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.