வருகிற 10ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம் …!

வருகிற 10ஆம் தேதி திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுமட்டுமின்றி பல்வேறு பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 10ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Comment