நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுவிக்க உத்தரவு!

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுவிக்க யாழ்ப்பாணம் ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 22 பேரையும் விடுவிக்க ஊர்க்காவல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தண்டி மீன் பிடித்ததாக பிப்ரவரி 24-ஆம் தேதி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.