இனிய செய்தி ! இனி 24 மணி நேரமும் திரையரங்குகள் செயல்படலாம் -தமிழக அரசு அரசாணை

24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று  அரசாணை வெளியிடப்பட்டது தமிழக அரசு.
தமிழகத்தில் 24 மணி நேரமும் திறந்து வைக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.மேலும்   24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட வேண்டும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது.
இந்நிலையில்  24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.