ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை விதிப்பு..!

காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்ததால், நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 14ஆயிரம் கன அடிக்குமேல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.