அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது என தகவல்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில், வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால், செந்தில் பாலாஜிக்கு சிறை கிட்டத்தட்ட உறுதியானது என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீது இன்று உத்தரவு வழங்குகிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். இந்த உத்தரவு  மூலம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும். செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.

அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.