தொழிலாளர்கள் தங்களது நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளான மகப்பேறு, திருமணம், இறப்பு சார்ந்த உதவிகளுக்கு, அதற்கான பதிவை தொழிலாளர்கள் விண்ணப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ சாதரணமாக ஆணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு காரணமாக ஆணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை கணக்கில் கொண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொழிலாளர்கள் திருமணம், மகப்பேறு, இறப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அது மட்டுமின்றி புதிதாக தொழிலாளர்கள் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும், மனுக்களில் திருத்தம் செய்வது, மாவட்டங்களுக்கு இடையிலான உறுப்பினர் பதிவு உள்ளிட்ட விண்ணப்பங்களை http://labour. tn. gov. in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…