மருத்துவ சுற்றுலா மாநாடு – தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னை கிண்டியில் 2 நாட்கள் நடைபெறும் மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் மருத்துவ சுற்றுலா மாநாட்டை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, இன்றும், நாளையும் மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது. சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்த பின், அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. மருத்துவ சேவையை பயனாளிகள் பெற முடியாததை தவிர்க்கவும், ஏற்படுத்தவும் மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறுகிறது. சவூதி அரேபியா, மொரிஷியஸ் உள்பட 20 நாடுகளில் 7இருந்து 0க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து மாநாடு நடைபெறுகிறது.