தமிழ்நாடு

விஷச் சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது.!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், கருணாபுரம் மக்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் ஆந்திராவில் இருந்து ‘மெத்தனாலை’ கைமாற்றி விட்டது தொடர்பாக மரக்காணத்தை சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்று 40க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான விஷச் சாராய வியாபாரி கோவிந்தராஜ், சகோதரர் தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகிய 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் எடுக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

 

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago