தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் ஓ.பி.ரவீந்திரநாத் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தேனி மக்களவை எம்பி ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான இடத்தில் 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்து.
சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் அந்த இடத்தில ஆட்டுப்பட்டி அமைத்து இருந்த அலெக்ஸ்பாண்டியன் உட்பட 2 தோட்ட தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அந்த இடத்திற்கு உரிமைதாரரான எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.