#BREAKING: கிசான் திட்டம் தற்காலிக நிறுத்தம்.! தமிழக அரசு உத்தரவு..?

கிசான் திட்டத்தை தற்காலிக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  மறு உத்தரவு வரும் வரை கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கக்கூடாது என அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் கிசான் திட்டத்தில் முறைகேடு அம்பலமானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத 5.5 லட்சம் பேர் முறைகேடாக சேர்த்து ரூ.110 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.