வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான கைரன் பொல்லார்டு அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில், 34 வயதாகும் பொல்லாடின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச போட்டியில் கைரன் பொல்லார்டு களமிறங்கினார். 2008-ல் பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக T20 போட்டியில் களம் கண்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்டு, 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2706 ரன்கள் எடுத்துள்ளார். இதுபோன்று 101 டி20 போட்டிகளிலும் விளையாடிய அவர், 1569 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2010 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் பொல்லார்டு, 184 போட்டிகளில் 3350 ரன்களை அடித்துள்ளார். மேலும், 2019- ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் 61 போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 25 போட்டிகளில் வெற்றியும், 31 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…