கருணாநிதி உலக தமிழர்களின் சொத்து – முதலமைச்சர் ஸ்டாலின் உரை

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி, மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. புகழ்பாடும் விழாவாக மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுபடுத்தும் விழாவாக இருக்கும்.

தமிழ் சமுயாதற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி. எனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும், கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்கிறேன். சென்னையில் டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. 1997-ல் டைடல் பூங்காவை ஏற்படுத்தி புரட்சியை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதி உலக தமிழர்களின் சொத்து. உலக தரத்தில் சென்னையில் கலைஞர் கன்வென்ஷன் சென்டர் என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும், 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். மேலும், ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால் தமிழகத்தில் தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளனர் எனஉரையாற்றினார்.