கர்நாடகாவில் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க முடிவு..!

கர்நாடகாவில் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை திறக்காமல் ஆன்லைன் வகுப்புகளை செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது இது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளதாவது, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு பரவல் பாசிட்டிவ் 2 சதவீதம்  கீழ் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பள்ளிகளுக்கு நுழையும் மாணவர்களின் பெற்றோரும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.