காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது..!

மதுரை பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜா, மாணவிகளிடம் சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசியுள்ளார். 

இதையடுத்து பேராசிரியர் தரக்குறைவாக பேசியதாக மாணவி ஒருவர், நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து, பேராசிரியர் சண்முகராஜாவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Leave a Comment