#JustNow: போலி பாஸ்போர்ட்.. 41 பேர் குற்றவாளிகள் – தமிழ்நாடு அரசு

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளிகள் என தமிழக அரசு தகவல். 

போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேர் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 14 பேர், தமிழக அரசு ஊழியர்கள் 5 பேர், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 பேர் என மொத்தம் 41 பேர் உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கு குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதனிடையே, போலி பாஸ்போர்ட் வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் “Q பிரிவு” காவல்துறை தலைவர் மேற்பார்வையில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளிகள் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment