சினிமா

விவாகரத்து செய்ய முடிவெடுத்த ஜெயம் ரவி – ஆர்த்தி? தீயாய் பரவும் தகவல்!!

ஜெயம் ரவி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வதந்திகள் மிகப்பெரிய ஒன்று விவாகரத்து வதந்தி என்றே கூறலாம். விவாகரத்து வதந்தி வெளியான பிறகு சற்று அதிர்ச்சியாகி அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுப்பது உண்டு. அப்படி தான், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது.

இப்படியான ஒரு தகவல் பரவுவதற்கு முக்கிய காரணமே ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி செய்த விஷயம் ஒன்று தான். அப்படி என்ன செய்தார் என்றால் மூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் இருக்கும் படங்களை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கமானது.

jayam ravi aarthi [file image]
ஆனால், திடீரென இன்று ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து கணவருடன் உள்ள அனைத்து படங்களையும் நீக்கியுள்ளார். இதன் காரணமாக தான் இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை போல எனவும், விவாகரத்து செய்ய முடிவு எடுத்து தான் இப்படி செய்தார் எனவும் தீயாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த தகவல் பற்றி இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இப்படி ஒரு அதிர்ச்சி செய்து வைரலாகி வருவதால் கண்டிப்பாக இருவரும் இணைந்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிப்பார்கள் எனவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும். நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை கடந்த 2009 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் ..! வெற்றி வீரர்களை வாழ்த்தி, விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி : நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மாகாணத்தில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை…

12 mins ago

இந்திய 2 வேற லெவல்…இந்தியன் 3 அதுக்கும் மேல..எதிர்பார்ப்பை எகிற வைத்த பாபி சிம்ஹா!!

இந்தியன் 2 : இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கர்…

30 mins ago

சேலத்தில் பரபரப்பு.! அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை.!

சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில்…

35 mins ago

மீண்டும் சவரன் ரூ.54,000ஐ கடந்த தங்கம் விலை.!

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…

40 mins ago

ரயில் இன்ஜினில் தொங்கி கொண்டு வந்த முதியவரின் சடலம்.! அதிர்ச்சி வீடியோ…

தெலுங்கானா : காட்கேசரின் புறநகர்ப் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

49 mins ago

தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்..! செல்வப்பெருந்தகை பாராட்டு

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, சித்தாமூர் ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்புரையாற்றினார்.…

56 mins ago