இராணுவத்தின் முப்படைகளும் கொரோனா எதிர்ப்பு பணியாளர்களுக்கு மரியாதை

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊர​டங்கு நாட்களின் போதும்  ஆபத்தைப் பொருட்படுத்தாமல் முன்னிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகத்துறையினருக்கு ஆகியோருக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக
அந்த முன்னிலைப் பணியாளர்களுடன் ராணுவத்தின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக நாளை சில முக்கிய நடவடிக்கைகளில் முப்படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக இந்திய இராணுவ தலைமை தளவதி பிபின் ராவத்  ஏற்கனவே கூறினார்.
அதன் விளைவாக இன்று, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் அந்த முதன்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.  இதில், இந்த நிகழ்ச்சியில் மிக்-29, சுகோய்-30, ஆகிய விமானங்கள் டெல்லி வான்பரப்பில் 30 நிமிடங்கள் பறந்து மரியாதை செலுத்தியது.  இந்திய விமானப்படை ​மற்றும் கடற்படை ​ஹெலிகாப்டர்கள் மூலம் கொரோனா சிகிச்சை வழங்கும்  அனைத்து முக்கிய மருத்துவமனைகள், காவலர் நினைவு சின்னங்கள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல்,  கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் கடலில் அணிவகுத்து மரியாதையும் இந்த முதன்மை பணியாளர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் தால் ஏரி மேற்பரப்பில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பறந்து தங்கள் மரியாதையை செலுத்தினர். அதேபோல தலைநகர் டெல்லியில் இந்தியா கேட், தேசிய காவல்துறை நினைவு அருங்காட்சியகம், ஆர்எம்எல் மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளின் மேற்புறங்களின் மீது இந்திய விமானப்படையின் விமானங்கள் பறந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களின் சேவையை பாராட்டினர். சென்னையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் ராணுவம் செலுத்திய மரியாதைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள் கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்தனர்.

Recent Posts

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

5 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

25 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

34 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

43 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago

மதுரையில் பெய்த கனமழை…வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி!

சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…

1 hour ago