முத்தக்காட்சியில் எழுந்த சர்ச்சை! ‘ஃபைட்டர்’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விமானப்படை அதிகாரி!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஃபைட்டர்’ . இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.

இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.   இதனையடுத்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியை மையமாக வைத்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு முத்தத்தின் மூலம் தங்கள் காதலை மீண்டும் தீபிகா படுகோனே மற்றும் ஹிருத்திக் ரோஷன் உறுதிப்படுத்துகிறார்கள்.

அந்த காட்சியின் போது விமானப்படை சீருடையில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் முத்தமிட்டு கொள்வதால் இது விமானப்படையின் வீரத்தை அவமதித்திருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, ‘ஃபைட்டர்’  படக்குழுவுக்கு   விமானப்படை அதிகாரி நோட்டிஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

நம்ப வச்சு தயாரிப்பாளர் ஏமாத்திட்டாரு! மால்வி மல்ஹோத்ரா வேதனை!

இந்த குற்றச்சாட்டு குறித்து விமானப்படை தரப்பில் கூறப்பட்டது என்னவென்றால் “‘ஃபைட்டர்’ படத்தின் இறுதிக்காட்சியில் சீருடையில் இருக்கும்போது கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இருவரும் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனை பார்க்கையில் விமானப்படை அதிகாரிக்கு கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை அந்த காட்சியும் பிடிக்கவில்லை.

ஏனென்றால், இந்த மாதிரி ஒரு படத்தின் கடைசி காட்சியில் அதுவும் விமான படையின் உடை அணிந்துகொண்டு இந்த காட்சியில் அவர்கள் நடித்துள்ளது பார்க்கையில் ராணுவத்தின் வீரமும் அதன் சீருடையும் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து தான் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது” எனவும் கூறியுள்ளனர்.

Leave a Comment