தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! உயிரிழப்பு இல்லை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பு நிலவரம் 

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், 106 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.