முறைகேடான பணி நியமனம்.. ஆவின் நிர்வாக குழு கலைப்பு – ஆணையர் உத்தரவு

விருதுநகர் ஆவின் நிர்வாக குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு.

மேலாளர் உள்ளிட்ட 25 பேர் முறைகேடான நியமனங்களால் விருதுநகர் ஆவின் நிர்வாக குழுவை கலைத்து ஆணையர் உத்தரவிட்டார். முறைகேடான பணி நியமனம் மூலம் நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் பால்வளத்துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். கூட்டுறவு சங்க விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உறுதியான நிலையில், மார்ச் 16-ல் குழு கலைக்கப்பட்டது எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

25 பேர் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பொதுப்பணியாளர்களை சேர்க்க ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டிருந்தது. கால்நடை, மீன்வளம், பால்வள துறையின் அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் மையப்படுத்தி ஆட்சேர்ப்பு வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment