இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் குறைந்தால், வீட்டில் செல்வம் குறையத்தொடங்கும்..!

வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறையத்தொடங்கினால் வீட்டின் செல்வ கடாட்சமும் குறைய தொடங்கும். 

பொதுவாக வீட்டில் செல்வம் சேர விரும்பினால் வீட்டில் இருப்பவர்கள் நேர்மறையாக பேச வேண்டும். எதிர்மறை எண்ணங்களோடு பேச கூடாது. இது இல்லை அது இல்லை என்று பேசுவது தவறு. அதேபோல் இந்த ஐந்து பொருட்கள் வீட்டில் குறைவாக இருக்க கூடாது. முதலாவது உப்பு. உப்பு வீட்டில் குறைவாக உள்ளது என்று கூறக்கூடாது. அதற்கு முன் நிறைவாக வைத்து கொள்ள முயலுங்கள்.

இரண்டாவதாக மஞ்சள். மங்களமான பொருளான மஞ்சள் வீட்டில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் வைக்க கூடிய குங்குமம் வீட்டில் தீர்ந்து போகும்படியாக இருக்க கூடாது. வீட்டிற்கு யாரும் சுமங்கலி பெண்கள் வந்தால் அவர்களுக்கு குங்குமம் கொடுப்பது வழக்கம். அதுபோன்று உங்கள் வீட்டிற்கு பெண்கள் வந்தால் குங்குமம் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அது முற்றிலும் அபசகுனமாக வார்த்தை ஆகும். அதனால் குங்குமம் எப்போதும் வாங்கி வீட்டில் வைத்திருங்கள். நான்காவதாக அரிசி.

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி மொத்தமாக தீர்ந்து போக விடக்கூடாது. அதற்கு முன்னரே வாங்கி வைத்து கொள்ள வேண்டும். ஐந்தாவதாக பெண்களின் சந்தோஷம். வீட்டில் உள்ள பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் வீட்டில் பணக்கஷ்டம் வரும். அதனால் வீட்டில் உள்ள பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும். இவை ஐந்தும் நிறைவாக இருந்தால் வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும்.

Leave a Comment