மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை – அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் அண்ணாமலை பாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குதான் பாஜகவில் இணைந்தேன். கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், அண்ணாமலை கூறுகையில், அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நாங்கள் ஒதுக்கவில்லை. அவர் விரக்தியில் இல்லை, முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.