சென்னையில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் என்பவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். 25 வயதான ஆகாஷ் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய 2 கிட்னியும் செயல் இழந்த நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.