16 வயதில் முதுகலைப்பட்டம்! அசத்தும் ஹைதராபாத் சிறுவன்.!

அகஸ்தியா ஜெய்ஸ்வால், 16 வயதில் முதுகலைப் படிப்பை முடித்த முதல் இந்தியச் சிறுவன் ஆனார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால், மிக இளம் (16)வயதில் முதுகலைப்பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் சிறுவன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத்தின் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சோசியாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

மேலும் இவர் 2020இல் தனது 14 வயதில் பட்டம் பெற்று மிக இளம் வயதில் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் மாணவர் என்ற சாதனையும் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பி.ஏ பட்டத்தை மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜெனலிஸம் பிரிவில் பெற்றிருந்தார்.

தனது 9 வயதில் பள்ளி இறுதித்தேர்வை முடித்த இந்தியாவின் மிக இளம் மாணவரும் இவர்தான். இரு கைகளாலும் எழுதும் திறன் படைத்த இவர் படிப்பில் மட்டுமின்றி தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரும் ஆவார்.

Leave a Comment