முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி.!

இந்த பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

தமிழகத்தில் கொரோனாவை தடுக்கவும் சிகிச்சை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா நோய் முதியவர்களுக்கு  நீரிழிவு நோய, உயர் ரத்த அழுத்த நோய், இதயம் சார்ந்த நோய்கள் பாதிக்கப்பட்டஙவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது.

இந்த பிசிஜி தடுப்பு மருந்தை 60 வயது முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் நோயுவுற்ற விகிதமும் உயிரிழப்பு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்தி ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கோரி உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து  தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளார்.’

இந்த சோதனை முயற்சியை ‘icmr’ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் பிசிஜி தடுப்பு மருந்தினை முதியோர்கள் செலுத்துவதன் மூலம் நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும் உயிரிழப்பை தவிர்க்க  அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.