தொடர்ந்து தங்கம் விலை கடும் உயர்வு! இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஏற்ற இறக்கம் கண்ட நிலையில், இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,590க்கும், ரூ.44,720க்கு விற்பனைசெய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்வுடன் இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,610க்கும், ரூ.44,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒருகிராம் 40 காசு உயர்ந்து ரூ.82.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.82,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.