பட்டாசு விபத்து.., நிவாரணம் வழங்கப்பட்ட காசோலை “பவுன்ஸ்”..!

அச்சங்குளம் விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட  காசோலை பவுன்ஸ் ஆனது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி அங்கு உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.

பின்னர், 25 குடும்பங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. காசோலை பணமாக மாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முயன்றபோது அதில் ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 24 காசோலைகள் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது.பணமில்லாத காசோலை அளித்த பட்டாசு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.