ஹைதராபாத்தில் இன்று மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்!

5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத்தை இறுதி செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், இந்த கூட்டம் கூடுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்னர்.

இன்று முதல் இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த செயற் குழு கூட்டத்தில், மாநில காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே சீட் பகிர்வு குழப்பங்களைஆலோசிக்க உள்ளது. மேலும், இதில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தேர்தல்கள் பற்றிய விவாதங்கள் எழுப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்தார்.