பரபரப்பு..! தண்டவாளத்தை விட்டு இறங்கிய ரயில்…!

ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு

சென்னை, பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.