சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சம்மன்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செப்.9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் அருந்ததியர் இன மக்கள் பற்றி தவறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குப்பதிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருந்ததியர் இன மக்கள் பற்றி தவறாக பேசியதாக எழுந்த புகாரில் சீமான் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.