நடப்பு கல்வியாண்டியில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று இணையவழியில் நடைபெறுகிறது.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இணைய வாயிலாக இன்று தொடங்குகிறது.
கலந்தாய்வில் அரசு அமைத்துள்ள மையங்கள் மூலம் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.