கடந்த வாரம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் $44 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ ஆக பணியாற்ற இருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரை வாங்கிய பிறகு அதன் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகி அடங்கிய குழுவைக் கலைத்துவிட்டு நிர்வாகத்தின் ஒரே இயக்குநராக ஆகப் பொறுப்பேற்றார்.
ட்விட்டரின் தலைமை நிர்வாகி பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்த பிறகு ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக(CEO), எலான் மஸ்க் பணியாற்ற இருக்கிறார். எலான் மஸ்க் ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கும் 4 கம்பெனிகளான ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க் மற்றும் தி போரிங் கிற்கு பிறகு ட்விட்டர் நிறுவனமும் தற்போது மஸ்க் வசம் வந்திருக்கிறது.
முன்னதாக எலான் மஸ்க், தனது ட்விட்டர் பயோ வில் சீஃப் ட்விட்(Chief Twit) என்று பதிவிட்டிருந்தார். மேலும் ட்விட்டரில் அதிகாரபூர்வ கணக்கை குறிக்கும் ப்ளூ டிக் அம்சத்திற்கு இனி மாதம், $ 20 வசூலிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் அதற்கு பதிலளித்த மஸ்க் இதன் மூலம் போலிக்கணக்குகளை ட்விட்டரில் இருந்து அகற்ற எடுத்திருக்கும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளார்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…