மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து களமிறங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டப்பேரவையில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை செய்தியாளர்களை சந்தித்து நேற்று முன்தினம் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இன்று 43 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. கோவை தெற்கில் முதல்முறையாக கமல்ஹாசன் களமிறங்குகிறார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணி இருக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வரும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் 40 தொகுதிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…