கோவில் கிணறு இடிந்து விபத்து..! பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு…

இந்தூரில் கோவில் கிணறு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியை முன்னிட்டு படேல் நகரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் பூஜைகள் செய்ய படிக்கட்டுக் கிணற்றின் அருகே பலர் கூடியிருந்தனர். அப்பொழுது திடீரென கோயிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்துள்ளது. கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிணற்றின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது, இந்த விபத்தில் 19 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என தகவல் தெரிவிக்கிற்னர். மேலும், கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment