துருக்கி, சிரியாவில் தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; 21,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.!

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21,000 ஜக் கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டையே குலைத்துள்ளது, பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான சடலங்கள் எடுக்கப்பட்டும், மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வருகின்றனர்.

பல சர்வதேச நாடுகளும் உதவிக்கரம் கொடுத்து வருகின்றன. இந்தியா சார்பில் மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,000ஐயும் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment