முக்கிய நிறுவனங்களின் இயக்குநர்களது பாஸ்போர்ட் தகவல்களைச் சேகரிக்க கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீரவ் மோடியைப் போல் வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு இனி யாரும் தப்பிச் செல்லாத வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்வோரின் பாஸ்போர்ட் விவரங்கள் இருப்பின், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் எளிதில் தடுத்துவிட முடியும் எனவும், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.