#Corona:மக்களே மிகக் கவனம்…கொரோனாவுக்கு ஒரே நாளில் 54 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,409ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,408 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,988 இருந்து 1,43,384 ஆக குறைந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,26,312 பேர் ஆக உள்ளது.
  • மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,33,30,442 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,03,94,33,480   கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 33,87,173 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment