Brazil beats Paraguay , Copa America 2024 [file image]
கோப்பா அமெரிக்கா: அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரின் இன்றைய C பிரிவில் அமைந்துள்ள அணிகளான பிரேசில் அணியும் மற்றும் பராகுவே அணியும் லாஸ் வேகாஸ்ஸில் உள்ள அல்லேஜியன்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
பிரேசில் வெற்றி கண்டால் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு செல்வார்கள் என இருந்த நிலையில் இந்த போட்டியானது விறுவிறுப்பாக தொடங்கியது. சரியாக 30′ நிமிடத்தில் பிரேசில் அணிக்கு ஒரு பெனால்டி ஷூட் கிடைக்கும், ஆனால் அதை தவறவிடுவார்கள்.
அதனை தொடர்ந்து 35′ வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வினிசியஸ் ஒரு அபாரமான கோலை பதிவு செய்வார். இதன் மூலம் 1-0 என பிரேசில் அணி முன்னிலை வகித்தனர். பின் அதை தொடர்ந்து 43’வது நிமிடத்தில் பிரேசில் வீரரான சவியோ அணிக்கான 2-வது கோலை பதிவு செய்வார்.
பின் போட்டியின் 45’வது நிமிடத்தின் கூடுதலாக 5′ நிமிடம் அதிலும் வினிசியஸ் சிறப்பாக செயல்பட்டு பிரேசில் அணிக்கு 3-வது கோலை பதிவு செய்வார். இதன் மூலம் 3-0 என பிரேசில் அணி முதல் பாதியில் முன்னணி வகிப்பார்கள்.
அதன் பிறகு தொடங்கிய இரண்டாம் பாதியின் 48’வது நிமிடத்தில் பராகுவே வீரரான ஆல்டெரெட் பதிலடியாக 1 கோலை பதிவு செய்வார். பின் போட்டியின் 65’வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பக்கெட்டா 4-வது கோலை அடிப்பார்.
அதன் பிறகு பராகுவே அணி தீவிரமாக முயற்சித்தும் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியாமல் போகும். இதன் காரணமாக 4-1 என கோல் முன்னிலை வகித்து பிரேசில் அணி வெற்றி பெறுவார்கள்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து…
பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும்…
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து…
சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட…
டெல்லி: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். நேற்று, சென்னையை அடுத்த பெரம்பூர்…
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது…