பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் தொடர்ந்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து 5 மாதங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment