காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி என தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு இவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதய பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.