நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், பல புதிய திட்டங்களை தொடக்கி வைத்தது மட்டுமல்லாமல், அனைத்து துறைகளின் பணியையும் உற்று கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த காவலர்களிடம் அவர் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடம் பின் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பினார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இரவும் பகலும் காவல் காத்து சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…