போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் உத்தரவு!

போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு. 

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

போதைப்பொருள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையிட்டார். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் பிணை முறிவு பத்திரம் மூலம் உறுதிமொழி பெற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும், அண்டை மாநிலங்களுடன் கலந்தாலோசித்து போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment