கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும், மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம், வ.உ.சி. மார்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து, ஜூன் 12ஆம் தேதி நாளை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை முதல்வர் திறந்து விடுகிறார். கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மே 24-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, வர மாதம் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.