#BREAKING: இபிஎஸ் வழக்கில் விசாரணை நடத்த தடை!

இபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் குற்றசாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றசாட்டுகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவு மீறி விசாரணை நடத்தியதாக காவல் அதிகாரிகள் மீது ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் மீது எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.  எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர். இதனால், இபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும், இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என சேலம் போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிசாமி பிராமண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.